திருக்குறள்

1108.

வீழும் இருவர்க் கினிதே வளியிடை போழப் படாஅ முயக்கு.

திருக்குறள் 1108

வீழும் இருவர்க் கினிதே வளியிடை போழப் படாஅ முயக்கு.

பொருள்:

காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்.

மு.வரததாசனார் உரை:

காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

இறுக அணைத்துக் கிடப்பதால் காற்றும் ஊடே நுழைய முடியாதபடி கூடிப் பெறும் சுகம், விரும்பிக் காதலிப்பார் இருவர்க்கும் இனிமையானதே.